நெற்பயிர்
மும்மாரி மழைபெய்து
முப்போகம் பயிரிட்டு
கருக்கு அறிவாள் கதிர் அறுத்து
களத்துமேடில் அதை சேர்த்து
யானை கட்டி,
சேனை கட்டி
நெல்லாக்கி
பகலவனை வழிபட்டு
பச்சரிசி பொங்கலிட்டு
பாமரனுக்கு படி அளந்து
மீதம் மாட்டு
வண்டி பூட்டி வந்து
சந்தையில
சாக்கு புடித்த காலம்
சாக்கு போக்கு சொல்லி போனதடி..!
ஏழை விவசாயி மகன் மைதிலிபாண்டி
No comments:
Post a Comment